ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை சீதா இரண்டாவது திருமண விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், பார்த்திபனை வெறுப்பேற்றுவதற்காகத்தான் அப்படியொரு நாடகத்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆண்பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சீதா. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த சீதா, பார்த்திபன் நடித்து இயக்கிய புதிய பாதை படத்தில் நாயகியாக நடித்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி குழந்தைகள் பிறந்த சில ஆண்டுகளிலேயே பார்த்திபன் - சீதா தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
பார்த்திபனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் சீதா, சமீபத்தில் சின்னத்திரை நடிகர் சதீஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்தன. அது முற்றிலும் உண்மை அல்லவாம். பார்த்திபனுக்கு அவரது உறவு முறையில் பெண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்களாம். அந்த செய்தி கேள்விப்பட்டுத்தான் சீதா, திருமண நாடகம் அரங்கேற்றியதாக ஒரு செய்தி கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது சில நாட்களாக!
அதானே?! சதீஷூடன் ஒரே வீட்டில் கடந்த சில வருடங்களாக வசித்து வரும் சீதா திடீர் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம்தான் இருக்கப் போகிறதா என்ன?