அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
வில்லனாக நடித்து ஹீரோவாக வளர்ந்த நடிகர்கள் பட்டியலில் இப்போது பாபி சிம்ஹாவும் இணைந்துள்ளார். அதுவும் ஒரே நேரத்தில் இறைவி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது உறுமீன், பாம்புசட்டை என நான்கு படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். நேரம், ஆ, ஆடாம ஜெயிச்சோமடா என பல படங்களில் அவர் நடித்தபோதும் ஜிகர்தண்டா என்ற ஒரே படம்தான் அவருக்கு இந்த அங்கீகாரத்தை கொடுத்துள்ளது.
ஆக, ஒரே நேரத்தில் கால்சீட்டை பிரித்துக் கொடுத்து நடித்து வரும் பாபி சிம்ஹா, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த படத்தில் 80 சதவிகிதம் அவர்தான் வருகிறாராம். அந்த அளவுக்கு அவருக்கே முழுக்க முழுக்க முக்கியத்துவம் கொடுத்து அந்த படத்தை தயாரித்துள்ளனர். மேலும், பாம்பு சட்டை படத்தில் பாபி சிம்ஹா கமிட்டாவதற்கு முன்பு ஜீவாதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரது யான் படம் கொடுத்த அதிர்ச்சி அவர் நடித்தால் வியாபாரம் சிக்கலாகி விடும் என்று பாபி பக்கம் திரும்பி விட்டார்களாம். ஆக, ஜீவாவின் இடத்துக்கு வந்து விட்டார் பாபி சிம்ஹா. இதேபோல் வேறு சில மார்க்கெட் இல்லாத ஹீரோக்கள் நடிக்க வேண்டிய படங்களும தற்போது பாபி சிம்ஹா பக்கம் திரும்பி நிற்பதாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.