சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மதுமிதா இயக்கும், ''மூணே மூணு வார்த்தை'' படம் தமிழ், தெலுங்கு என்ற இரண்டு மொழிகளில் தயாராகிறது. எஸ்.பி.பி.சரண் தயாரிக்கிறார். இதில் தமிழில் அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார், தெலுங்கில் ராக்கி ஹீரோவாக நடிக்கிறார். இரண்டு மொழிக்கும் ஹீரோயின் அதிதி செங்கப்பா. காதல் காட்சிகள், பாடல் காட்சிகள் அனைத்தும் இரண்டு மொழிக்கும் சேர்த்து எடுக்கப்பட்டதால் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார் அதிதி.
இதுபற்றி அவர் கூறியதாவது: வசன காட்சிகளில் தெலுங்கு வசனத்தை சரளமாக பேசி விடுவேன். தமிழ் வசனம் பேச திணறுவேன். இதனால் வெங்கி காட்சி ஓரிரு டேக்கில் முடிந்து விடும், அர்ஜுன் காட்சி நிறைய டேக் போகும். பாடல் காட்சியில் வெங்கி நிறைய டேக் எடுத்துக்குவார். அர்ஜுன் ஓரிரு டேக்கில் ஓகே பண்ணிவிடுவார். இருவரையும் சமாளிப்பது சிரமமாக இருந்தது.
நம்மை விட அவருடன் நடிக்கும்போது நன்றாக நடிக்கிறார், ஆடுகிறார் என்கிற பிரச்சினை வந்துவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக நடிக்க வேண்டியது இருந்தது. இயக்குனர் மதுமிதா சாதுர்யமாக அதனை சமாளித்தார். அவருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். என்கிறார் அதிதி.