சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கோவையில் நடந்த ஒரு தனியார் நிறுவன அறிமுக விழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வைரமுத்து பேசியதாவது: தலை முடி நம் பரம்பரையோடு சம்பந்தப்பட்டது . ஒரு தலைமுடியை வைத்து நம் சரித்திரத்தையே சொல்லமுடியும். அப்படிப்பட்ட தலைமுடிக்கு நாம் செய்யும் துரோகம் என்னவென்று தெரியுமா? குளித்துவிட்டு ஈரத்தலையோடு தலைவாரிக்கொள்வது. அதன் மூலம் வேர்கள் பாதிக்கப்படுகின்றன. நம் தலையில் இருந்து முடி உதிரத் தொடங்குகிறதா? நம் உடலில் எதோ நோய் இருக்கிறது என்று அர்த்தம். தலையை மின் உலர்த்தியைக் கொண்டு உலர்த்தாதீர்கள் அது முடிக்கு கேடு. இயற்கையாக வெயிலில் வைத்து உலர்த்துங்கள்.
இயற்கையானதையே பயன்படுத்துங்கள். நான் தினமும் நான்கு கருவேப்பிலை இலைகளை கழுவி மென்றுவிட்டுத்தான் வெளியில் கிளம்புகிறேன். முருங்கைக்கீரை, துளசி இலை சாப்பிடுங்கள். இயற்கை முறைக்கு மாறுங்கள். தலைமுடி சரும நோய்களுக்கு மற்றொரு காரணம் குடி. அது எல்லா வகையான கெடுதல்களையும் கொண்டு வருகிறது. இளைஞர்களை சீரழிக்கிறது. வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டுமானால் குடிப்பதை விட்டொழியுங்கள். இவ்வாறு வைரமுத்து பேசினார்.