சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சென்னை 28 படத்தில் அறிமுகமாகி மளமளவென வளர்ந்தவர் ஜெய். சுப்பிரமணியபுரம், ராஜா ராணி, திருமணம் என்னும் நிக்காஹ், கோவா, வடகறி படங்களில் நடித்தார். தற்போதும் 5 படங்களில் நடித்து வருகிறார். ஜெய் குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி கூறப்படுவதாவது: ஜெய், ராயப்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு ராயப்பேட்டை மேம்பாலம் வழியாக மயிலாப்பூருக்கு காரில் வந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். ஜெய் காரை சோதனை செய்தபோது அவர் போதையில் இருப்பதை உறுதி செய்து அதற்கான அபராதத்தை விதித்தனர். ஜெய் நடிகர் என்பதை போலீசார் அறியவில்லை. ஆனால் அங்குகூடிய பொதுமக்ககள் அவர் நடிகர் என்பதை கண்டுபிடித்து சூழ்ந்துவிட்டனர். பின்னர் அங்கிருந்து ஜெய் வேகமாக சென்று விட்டிருக்கிறார்.
இந்த செய்தியை போலீசார் மறைத்தபோதும் அந்த பகுதி பொதுமக்களின் வாயிலாக வெளிவந்திருக்கிறது. இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.