அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
திருடன் போலீஸ்' படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.பி.பி.சரண் தனது 'கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்திற்கு 'மூணே மூணு வார்த்தை' என்று பெயர் சூட்டியுள்ளார். இந்தப் படத்தை மதுமிதா இயக்குகிறார். இவர் 'வல்லமை தாராயோ', 'கொல கொலயா முந்திரிக்கா' ஆகிய படங்களை இயக்கியவர். இவ்விரு படங்களும் சுமாராகப் போனதால் மதுமிதாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை. சுட்டகதை படத்தை எடுத்த லிப்ரா புரடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் மதுமிதாவுக்கு ஒரு படவாய்ப்பை வழங்கியது. சுட்டகதை ப்ளாப்பானதால் படத்துறையைவிட்டே லிப்ரா பிலிம்ஸ் காணாமல்போய்விட்டது.
இந்நிலையில்தான் 'மூணே மூணு வார்த்தை' படத்தை இயக்கும் வாய்ப்பு மதுமிதாவுக்குக் கிடைத்திருக்கிறது. இதுவரை எஸ்.பி.பி.சரண் தயாரித்த அத்தனை படங்களையும் புதுமுக இயக்குனர்களே இயக்கியிருந்தார்கள். ஆனால் இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்கெனவே இரண்டு படங்களை இயக்கிய மதுமிதாவிடம் வழங்கியுள்ளார் எஸ்.பி.பி.சரண். அதே சமயம், வழக்கமாக தனது ஒவ்வொரு படங்களிலும் புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்தும் எஸ்.பி.பி.சரண் இப்படத்திலும் 5 முக்கியமான டெக்னீஷியன்களை அறிமுகப்படுத்த இருக்கிறாராம். அவர்கள் யார் என்பதையும், படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதையும் விரைவில் ஒரு விழாவை நடத்தி அறிவிக்க திட்டமிட்டுள்ளாராம் எஸ்.பி.பி.சரண். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டதாம்! சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் படமே முடிந்துவிடுமாம்.