சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
திகார் சிறையில் உயர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர் கிரண்பேடி. இவரை தான் இயக்கியுள்ள திகார் படத்தின் ஆடியோ விழாவுக்கு சென்னைக்கு அழைத்து வந்திருந்தார் டைரக்டர் பேரரசு. அப்போது திகார் படத்தின் ட்ரெய்லரைப்பார்த்த கிரண்பேடி, இந்த படத்தில் வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருப்பது போல் தெரிகிறது. ஆனால், நீங்களெல்லாம் நினைப்பது போல் திகார் ஒன்றும் வன்முறை நிறைந்த இடமல்ல. அது ஒரு அமைதியான இடம். திரைப்படங்களில்தான் வன்முறை களம் போன்று அதை சித்தரிக்கிறீர்கள் என்றார்.
மேலும், நான் திகார் ஜெயிலின் அனுபவங்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அந்த புத்தகம் இத்தாலிய பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. அந்த புத்தகத்தில் உள்ள விசயங்களை படமாக்கினால் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று சொன்ன கிரண்பேடி, அனைவருக்கும் கல்வி அறிவு வேண்டும். அப்போதுதான் வன்முறைகள் குறையும். அதனால் நான் ஜெயிலில் இருந்த படித்தவர்களை பயன்படுத்தி படிப்பறிவு இல்லாமல் இருந்தவர்களுக்கு கல்வி அறிவை புகட்டினேன் அவையனைத்தும் அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது என்று கூறிய அவர், எனது புத்தகத்தை இதுவரை தமிழாக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை என்று பேசினார்.