Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வில்லன் நடிகருடன் நெருக்கமான விஜய்

27 நவ, 2014 - 05:06 IST
எழுத்தின் அளவு:

நான் ஈ படத்தின் வெற்றி காரணமாகவே கன்னட நடிகர் சுதீப்பை விஜய் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க வைத்திருக்கிறார்கள். சுதீப்புக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், சுதீப், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கும் விஜய் 58 படத்தின் வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஈசிஆரில் நடைபெறும் விஜய் 58 படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை வந்துள்ள ஸ்ரீதேவி மற்றும் கன்னட சூப்பர்ஸ்டார் நான் ஈ புகழ் சுதீப் இருவரும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்கள்.


பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சுதீப், விஜய் 58 படத்தில் விஜய்க்கு சமமான வேடத்தில் நடிப்பதாக நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, சுமார் 10 வருடங்களுக்கு முன்பே விஜய்யை சந்தித்துள்ளதாகவும், அப்போதிலிருந்தே இருவரும் நண்பர்கள் என்றும் சொல்லி இருக்கிறார் சுதீப். அதாவது, 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த மதுர படத்தின் படப்பிடிப்புத்தளத்தில் விஜய்யும் சுதீப்பும் சந்தித்துக் கொண்டார்களாம்.


மதுர படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரக்ஷிதா, கன்னட படம் ஒன்றில் சுதீப்புக்கும் ஜோடியாக அப்போது நடித்துக் கொண்டிருந்தாராம். அந்த இரண்டு படங்களுக்குமான படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடைபெற்றபோது, சுதீப்பை விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ரக்ஷிதா. அப்போது சந்தித்துக் கொண்ட இருவரும், இரண்டு வருடங்கள் கழித்து பிரபுதேவா கொடுத்த பார்ட்டி ஒன்றிலும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். தற்போது விஜய் 58 படத்தின் படப்பிடிப்பில் விஜய், சுதீப் இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாகிவிட்டனராம். அதன் காரணமாக, சமீபத்தில் சுதீப்பை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்திருக்கிறார் விஜய். அதனாலோ என்னவோ... விஜய்யை இனிமையானவர் என்றும், எளிமையானவர் என்றும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார் சுதீப்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)