சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சந்தானம், பவர்ஸ்டார், சேது ஆகியோர் இணைந்து நடித்த படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. மூன்று பேர் ஹீரோக்களாக நடித்த இந்த படத்தில் ஒரேயொரு நாயகியாக நடித்தவர்தான் விசாகா சிங். படம் சூப்பர் ஹிட்டானதால், அதையடுத்து, தமிழில் தனக்கு மெகா ஹீரோக்களின் படங்கள் புக்காகும் என்று ரொம்பவே எதிர்பார்த்தார் விசாகாசிங். ஆனால், அதையடுத்தும் அதே சந்தானம்-சேது நடித்த வாலிபராஜா என்ற படம் மட்டுமே கிடைத்தது.
ஆனால், அந்த படமும் அனைத்து வேலைகளும் முடிந்து விட்ட நிலையில், இன்னமும் திரைக்கு வருவதற்கான அறிகுறிகளே இல்லை. அதனால் இந்த படம் வந்தாலாவது ஒரு சேஞ்ச் கிடைக்குமா? என்று எதிர்பார்த்த விசாகாவுக்கு மீண்டும் ஏமாற்றம்தான். இந்த நிலையில், விமல் -ப்ரியாஆனந்துடன் இணைந்து விசாகா நடித்துள்ள ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் நவம்பர் 7-ந்தேதி திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இருப்பினும், இந்த படம் திரைக்கு வருவதினால் விசாகாசிங்கிற்கு பெரிய மகிழ்ச்சி ஒன்றும் இல்லையாம். காரணம், இந்த படத்தில் ப்ரியா ஆனந்த்தான் மெயின் ஹீரோயினியாக நடித்திருக்கிறாராம். விசாகாவிற்கு ஒரு சிறிய வேடம்தான். அதைகூட ஒரு கேரக்டர் என்றுதான் சொல்கிறார்கள். அதனால் இந்த படம் வந்து தனது ஹீரோயின் இமேஜை காலி பண்ணி விடுமோ என்று உள்ளூர கலங்கிப் போயிருக்கிறார் லட்டு விசாகாசிங்.