வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
இந்திய பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி அதில் திரையுலக நட்சத்திரங்களை பங்கேற்க அழைத்திருக்கிறார். அவர் நேரடியாக அழைத்த நட்சத்திரங்களில் கமலஹாசனும் ஒருவர். அதனை ஏற்றுக் கொண்ட கமல் 90 லட்சம் பேரை தூய்மை இந்தியா திட்டத்தில் சேர்க்க இருப்பதாக அறிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக தனது பிறந்த நாளான வருகிற 7ந் தேதி அன்று நீர்நிலைகள் தூய்மைப் படுத்தும் இயக்கத்தை தொடங்குகிறார். தாம்பரம், வேளச்சேரி முதன்மை சாலையில் உள்ள ராஜாகீழ்ப்பாக்கம் மாதம்பாக்கம் ஏரியில் இந்த பணியினை துவக்கி வைக்கிறார்.
அன்று மாலை சென்னை தூர்தர்ஷன் எதிரில் உள்ள அண்ணா அரங்கில் தூய்மை இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தனது நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் கலந்து பேசுகிறார். பின்னர் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவது பற்றி விளக்கி கூறுகிறார். இந்த நிகழ்ச்சியில் திரளான கமல் ரசிகர்களும், திரையுலகினரும் கலந்து கொள்கிறார்கள்.