படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
ஹுட் ஹுட் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர பல்வேறு விதங்களில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பெரும்பாலான தெலுங்கு நடிகர்களும், சில தமிழ் நடிகர்களும் நிவாரண உதவி வழங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெலுங்குத் திரையுலகினர் நவம்பர் 9ம் தேதி 'வி லவ் வைசாக்' என்ற மாபெரும் நிதி திரட்டும் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். தெலுங்கு நடிகர்களோடு தமிழின் முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி இருவரும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற ஆர்வத்துடன் முன் வந்துள்ளார்களாம். இவர்களிருவருக்கும் தெலுங்குத் திரையுலக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அது மட்டுமல்ல, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட மற்ற சிலரும் நிகழ்ச்சிக்கு வருவதாக உறுதியளித்துள்ளார்கள் என தெலுங்குத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோர் மட்டுமே தமிழ்த் திரையுலகிலிருந்து ஹுட் ஹுட் புயல் நிவாரண நிதியாக பண உதவிகளை ஏற்கெனவே வழங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.