சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மாதவன் தமிழில் அறிமுகமான படம் அலைபாயுதே. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜீத்தின் மனைவியான ஷாலினிதான் நாயகியாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆனால் அதையடுத்து தான் இயக்கிய படங்களுக்கு அவரை பயன்படுத்தாத மணிரத்னம், இப்போது துல்கர்சல்மான்-நித்யாமேனனை வைத்து தான் இயக்கி வரும் ஓகே கண்மணி படத்தில் மீண்டும் பிசிஸ்ரீராமுடன் இணைந்துள்ளார்.
அதோடு, இந்த ஓகே கண்மணி படம் மெளனராகம் படத்தின் ரீமேக் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது அலைபாயுதே படம் பாணியில்தான் தனது புதிய படத்தை மணிரத்னம் இயக்கி வருவதாக செய்தி கசிந்துள்ளது. இன்றைய தருவாயில் எத்தனையோ நவீன காதல் கதைகள் வந்து கொண்டிருந்தாலும் அவை அனைத்தையும் விட வித்தியாசமான கோணத்தில் காதலை அணுகியுள்ளாராம் மணிரத்னம்.
மேலும் இதற்கு முந்தைய படங்களை வருடக்கணக்கில் எடுத்து வந்த மணிரத்னம், இந்த படத்தை இரண்டே மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதற்கேற்ப துல்கர்சல்மான்-நித்யாமேனன்-பிரகாஷ்ராஜ், கனிகா என முக்கிய வேடங்களில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுமே ஸ்பாட்டில் தயார் நிலையில் இருக்கிறார்களாம்.
இதற்கிடையே தற்போது லிங்கா, ஐ, காவியத்தலைவன் என்று பிசியாக இசையமைத்துக் கொண்டிருக்கும் ஏ.ஆர்.ரகுமானும், விரைவில் மணிரத்னத்துக்கு சில பாடல்களை கம்போஸ் செய்து கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம். ஆக, திட்டமிட்டபடி படத்தை வேகமாக மணிரத்னம் முடிப்பதற்கான சூழ்நிலைகளும நிலவியிருக்கிறது.