சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெளிந்த நீரோடை போன்று கதை சொல்லிக் கொண்டிருந்த சினிமாவில் திரைக்கதை என்ற வடிவத்தை உருவாக்கியவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அகிரா குரோசேவா. படம் தொடங்கிய 20 நிமிடத்துக்குள் கதை சொல்ல வேண்டும். இடைவேளையில் ஒரு திருப்பம் வேண்டும். கடைசியில் கிளைமாக்ஸ் இருக்க வேண்டும். இதெல்லாம் அகிரா கட்டமைத்த திரைக்கதை வடிவம். சினிமா இயக்குனர்களின் ஆதர்ஷன இயக்குனர்.
அவரின் திரைப்படங்களை கொண்ட திரைப்பட விழா நேற்று (அக் 14) சென்னை எம்.எம்.தியேட்டரில் தொடங்கியது. தி ஜப்பான் பவுண்டேஷன், இந்தோ சினி அப்ரிஷியேஷன், தி மெட்ராஸ் பிலிம் சொசைட்டி இணைந்து இதனை நடத்துகிறது. துவக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் சசிகுமார், தி ஜப்பான் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் மசநோரி நகானா, நடிகை ரேஷ்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் வருகிற 19ந் தேதி வரை மாலை 6 மணிக்கு அகிரா குரோசேவாவின் புகழ்பெற்ற படங்களான செவன் சாமுராய், ரெட்பிரட், ரேஷ்மேன், ஹய் அண்டு லோ, ஓய்ஜெம்போ, சஞ்ரோ ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது.