Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கன்னட சினிமாவை முற்றுகையிடும் தமன்னா!

15 அக், 2014 - 10:07 IST
எழுத்தின் அளவு:

இந்தியில் எண்டர்டெயின்மெனட், தெலுங்கில் ஆகடு படங்களில் நடித்து முடித்த பிறகு தமன்னாவின் கைவசம் படங்கள் இல்லை. தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடித்த ஆகடு வெற்றி பெற்றிருந்தால் புதிய படங்கள் ஒன்றிரண்டு கமிட்டாகியிருககும். ஆனால் படம் படுதோல்வியடைந்ததால் அதையடுத்து அங்குள்ள பட அதிபர்கள் தமன்னா பக்கமே திரும்பவில்லையாம்.

தமிழில் உதயநிதி-நயன்தாரா நடித்து வரும் நண்பேன்டா படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்து முடித்து விட்டார். அதையடுத்து, தெலுங்கில் ராஜமவுலியின் பாகுபலி படத்திலும் தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாம்.


ஆனால், இதன்பிறகு அவருக்கு புதிய படங்கள் எதுவுமே கைவசம் இல்லையாம். அடுத்தபடியாக ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம்தான் உள்ளதாம். அதனால் தற்போது தனது தாய்வீடான மும்பைக்கு சென்று பெற்றோர் மற்றும் தோழிகளுடன் ஜாலியாக பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறார் தமன்னா.


ஒருவேளை அடுத்த மாதம் ஆர்யா நடிக்கும் படவேலைகள் தொடங்கப்படவில்லை என்றால், குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு டூர் செல்லவும் திட்டமிட்டுள்ளாராம் தமன்னா. கடந்த பல வருடங்களாக தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டிருந்த தமன்னா, அடுத்தபடியாக தென்னிந்தியாவில் சரியான படவாய்ப்புகள் கிடைக்காதபட்சத்தில் த்ரிஷா பாணியில் கன்னட சினிமாவை முற்றுகையிடவும் திட்டமிட்டுள்ளாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)