சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சலீம் படத்தின் தெலுங்கு ரைட்ஸை அப்பட இயக்குநர் நிர்மல்குமாரிடம் ஏற்கனவே எழுதி வாங்கிக் கொண்டார் விஜய் ஆண்டனி. தற்போது சலீம் படம் வெற்றியடைந்த நிலையில், அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கும் வாய்ப்பு நிர்மல்குமாருக்கு தேடி வந்ததாகவும், தெலுங்கு ரைட்ஸை கையில் வைத்திருக்கும் விஜய் ஆண்டனி, சலீம் படத்தை தெலுங்கில் டப் செய்ய இருப்பதால், நிர்மல்குமாருக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இதுபற்றி சலீம் பட இயக்குநர் நிர்மல்குமாரிடம் கேட்டபோது, அந்த செய்தியை மறுத்தார். அதோடு, உண்மைநிலவரத்தையும் விளக்கினார்.. விஜய் ஆண்டனி சாருக்கும் எனக்கும் எந்த கருத்துவேறுபாடும் இல்லை, மனவருத்தமும் இல்லை. எங்களுக்கிடையே நல்ல நட்பும் புரிதலும் இருக்கிறது. விஜய் ஆண்டனி சார் நடித்த நான் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டபோது பெரிய வெற்றியடைந்தது. எனவே, சலீம் படத்தையும் தெலுங்கில் டப் செய்து வெளியிட விரும்பினார். அதற்கான எண்ணத்திலும் அவர் இருந்தார்.
இந்தநிலையில்தான், சலீம் படத்தைப் பற்றி கேள்விப்பட்ட தெலுங்கு ஹீரோ வெங்கடேஷ், அதை தெலுங்கில் ரீமேக் பண்ண விரும்பினார். என்னையே டைரக்ட் பண்ணும்படி சொன்ன அவர் தானே நடிக்க விரும்புவதாகவும் முன் வந்தார். என்னைப் போன்ற புதுமுக இயக்குநருக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு என்பதால் உடனே இதைப் பற்றி விஜய் ஆண்டனி சாரிடம் சொன்னேன். வெங்கடேஷ் நடிக்கும் படத்தை நீங்கள் டைரக்ட் பண்ணுவது நல்ல விஷயம். உங்களுக்காக, சலீம் படத்தை தெலுங்கில் டப் பண்ணும் திட்டத்தையே ட்ராப் பண்ணிவிடுகிறேன். நீங்கள் ரீமேக் பண்ணுங்கள் என்று சொன்னது மட்டுமல்ல, சலீம் படத்தை தெலுங்கிலும் சக்சஸ் பண்ணிக்காட்டுங்கள் என்றும் என்னை மனசார வாழ்த்தினார். உண்மை இப்படி இருக்கும்போது, எனக்கும் அவருக்கும் பிரச்சனை...என்று செய்திகள் வருவது வருத்தமாக இருக்கிறது. என்று சொன்னார் நிர்மல்குமார்.