சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஜிகர்தண்டாவிற்கு பிறகு சித்தார்த் நடித்து வந்த படம் காவியத்தலைவன். இந்த படத்தில் அவரைப்போலவே இன்னொரு ஹீரோவாக மலையாள நடிகர் பிருதிவிராஜூம் நடித்துள்ளார். நாடக காலத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை வசந்தபாலன் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். முக்கியமாக மேற்கத்திய இசையை கலந்தே இதுவரை இசையமைத்து வந்த ரகுமான், முதன்முறையாக நம்முடைய கலாச்சார இசை வடிவத்தை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார்.
அதனால் இந்த படத்திற்கு எதிர்பார்பபு ஏற்பட்டிருக்கிறது. முக்கியமாக சித்தார்த்தைப்பொறுத்தவரை தனது கேரியரில் இந்த படம் புதுசாக இருக்கும் என்று கருதுகிறார். அதனால், ஜிகர்தண்டாவிற்கு பிறகு இந்த படத்திற்கு கேட்ட நேரத்தில் கால்சீட் கொடுத்து நடித்த அவர், தனக்கான டப்பிங் வேலைகளையும் எப்போதோ முடித்துக்கொடுத்து விட்டாராம் ஆனால், பின்னணி இசையமைக்க வேண்டிய ஏ.ஆர்.ரகுமான், ஹாலிவுட்டில் முகாமிட்டிருப்பதால் காவியத்தலைவன் பட வேலைகள் இன்னமும் முடிவடையாமல் இழுபறியில் உள்ளதாம்.
இந்தநிலையில், சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள கன்னட லூசியா படத்தின் ரீமேக்கான எனக்குள் ஒருவன் பட வேலைகள் முடிந்து விட்டதாம். சித்தார்த் டப்பிங் பேச வேணடியது மட்டும்தான் பாக்கியாம். ஆனால், சித்தார்த்தோ, காவியத்தலைவன் முதலில் வந்தால்தான் சரியாக இருக்கும். அதனால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள் என்று எனக்குள் ஒருவன் படத்துக்கு டப்பிங்கூட பேசாமல் இழுத்தடித்து வருகிறாராம். அதனால், இதுவரை எனக்குள் ஒருவன் படத்தில் இரண்டு வேடங்களில் பின்னி எடுத்திருக்கிறார் சித்தார்த் எனறு அவர் புகழ் பாடி வந்த எனக்குள் ஒருவன் டீம், இப்போது அவர் மீது கடும அதிருபதியில் உள்ளது.