சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு, வருத்தம் தெரிவிக்கும் விதமாக தமிழ் திரையுலகம் சார்பில் சார்பில் நாளை(செப்., 30ம் தேதி) ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் திரையுலகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு, எங்கள் தமிழ் திரையுலகின் சார்பில் வருத்தத்தையும், உணர்வுகளையும் தெரிவிக்கும் வகையில் அறவழியில் மாபெரும் மவுன உண்ணாவிரத போராட்டாத்தை அனைத்து தமிழ் திரையுலகின் சார்பாக சென்னை சேப்பாக்கம், அரசு விருந்தினர் மாளிகை அன்று நாளை காலை 9.30 மணிமுதல் மாலை 5.00 மணி வரை நடைபெற இருக்கிறது.
இதில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய பிலிம் சேம்பர், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி, தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் சங்கம், திரைப்பட உரிமையாளர் சங்கம், சின்னத்திரை மற்றும் பி.ஆர்.ஓ., சங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதனையொட்டி நாளை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன, தியேட்டர்களில் திரைப்பட காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.