சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சினிமா சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் நடிகை அஞ்சலியின் கை எலும்பு முறிந்தது. கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்க அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறாவிட்டாலும் அஞ்சியின் மவுசு மட்டும் கூடியது. அங்காடித்தெரு படத்தில் நடித்ததன் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி விட்டார் அஞ்சலி. கனி என்ற கிராமத்து பெண் கேரக்டரால் ஆண்கள் மட்டுமல்ல... பெண்களையும் கவர்ந்த அஞ்சலி, இப்போது மகாராஜா, தம்பி வெட்டோத்தி சுந்தரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
மகாராஜா படத்தின் இறுதிகட்ட சூட்டிங் சென்னையில் நடந்தது. இதில் நடிகை அஞ்சலி கலந்து கொண்டு ஸ்கூட்டி ஓட்டும் காட்சியில் நடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்த அஞ்சலிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அலறித் துடித்த அஞ்சலியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அஞ்சலியை பரிசோதித்த டாக்டர்கள் கை எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கைக்கு கட்டு போடப்பட்டது. தற்போது அஞ்சலி 15 நாள் ஓய்வில் இருக்கிறார்.