சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கணீர்க் குரலுக்கு சொந்தக்காரரான கே.ஜே.யேசுதாஸ் அனிருத் இசையமைத்து வரும் 'கத்தி' படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் மீண்டும் இணைந்து பணியாற்றி வரும் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் இசை வெளியீடு இன்னும் சில நாட்களில் அதாவது 18ம் தேதி நடை பெற உள்ளது. இன்றைய இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்படும் இசையமைப்பாளராக அனிருத் இருந்தாலும் அவரும் பழம் பெரும் கலைஞர்களுக்கு மரியாதை கொடுக்கத் தவறுவதில்லை.
'வேலையில்லா பட்டதாரி' படத்தில் பழம் பெரும் பாடகியான எஸ்.ஜானகியை பாட வைத்தார். தற்போது கே.ஜே.யேசுதாசைப் பாட வைத்திருக்கிறார். இளமையும், பழமையும், பெருமையும் இணைந்தபடியான பாடல்களை இன்றைய ரசிகர்களும் வெகுவாக ரசிக்கிறார்கள். காலம் மாற மாற பழைய பாடல்களை ரசிப்பவர்களும், பழைய பாடகர், பாடகிகளையும் ரசிப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும் என்று சொல்வார்கள். ஆனால், தற்போதைய தலைமுறையைப் பொறுத்தவரையில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமும் அன்றைய காலகட்டத் திரையிசைப் பாடல்கள் அடிக்கடி பார்க்கப்படும் வாய்ப்புகள் கிடைப்பதால் அவர்கள் அந்தத் தரமான இசையை இன்றும் கேட்டு வருகிறார்கள்.
பழமையில் புதுமை, புதுமையில் பழமை என்பதெல்லாம் இன்றைய காலக்கட்டத்தில் நன்றாகவே 'வொர்க் அவுட்' ஆகி வருகின்றன. அந்த விதத்தில் 'கத்தி' இசையில் யேசுதாஸ் பாடியிருக்கும் பாடலும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.