சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி அதன்பிறகு ஹீரோவானவர்கள்தான் சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள். அந்த வரிசையில் இப்போது நேரம், ஜிகர்தண்டா படங்களில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவும் ஹீரோவாகி விட்டார். அவர்களெல்லாம் பல வருடங்களாக வில்லன்களாக நடித்து அதன்பிறகுதான் ஹீரோ ஆனார்கள்.
ஆனால், சிம்ஹாவோ, சில படங்களில் நடித்ததுமே ஹீரோவாகி விட்டார். அப்படி அவர் ஹீரோ ஆனதற்கு முதல் காரணம் ஜிகர்தண்டாதான். அந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் சித்தார்த் என்றாலும், வில்லனாக நடித்த சிம்ஹாவுக்கே மொத்த பாராட்டும் சென்றதும். அவரைச்சுற்றியே படத்தின் மொத்த கதையையும் பின்னப்பட்டிருந்ததால், இப்போது எத்தனை வெயிட்டான வேடங்களிலும் அவர் நடிப்பார் என்ற நம்பிக்கை டைரக்டர்களுக்கு ஏற்பட்டு விட்டது.
அதன்காரணமாக, தில்லுமுல்லு பத்ரி இயக்கியுள்ள ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் கருணாகரன் ஹீரோவாக நடித்தபோதும், பாபி சிம்ஹாவை இன்னொரு ஹீரோவாக்கியுள்ளார். அவரைப்பார்த்து இப்போது தனுஷ் நடித்த மரியான் படத்தை இயக்கிய பரத்பாலா தான் இயக்கும் புதிய படத்திற்கு பாபி சிம்ஹாவையே ஹீரோவாக்கியிருக்கிறார். ஆக இந்த படத்தில் சிங்கிள் ஹீரோவாக அரிதாரம பூசவுள்ள சிம்ஹாவுக்கு பொருத்தமான கதாநாயகியை தேடும் அடுத்தகட்ட வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் பரத்பாலா.