சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பார்த்திபன் இயக்கிய, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் கடந்த 15ந் தேதி வெளியானது. மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படம் பார்த்திபனை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. மேலும் 60 திரையரங்குகளும் உயர்த்தப்பட்டுள்ளது. 25 வருடங்களுக்கு பிறகு பெற்ற வெற்றியை நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று கேக் வெட்டி கொண்டாடினார். சென்னை பிரசாத் லேப்பில் இந்த சக்சஸ் பார்ட்டி நடந்தது. இந்த வெற்றி கொண்டாட்டத்தில் இயக்குநர் பார்த்திபன் உடன் தம்பி ராமைய்யா, இசையமைப்பாளர் சத்யா, மனீஷ்ய புத்திரன் மற்றும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த நடிகர்-நடிகையரும் பங்கேற்றனர்.
மேலும் திருட்டு விசிடி.க்கள் அதிகமாகிவிட்டதாகவும், சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா படத்தின் திருட்டு விசிடி வெளியான போது, நான் போலீசிடம் புகார் தெரிவித்தேன். ஆனாலும் பெரிய நடவடிக்கை இல்லை. இப்போது என் படத்தின் திருட்டு விசிடிக்களும் வெளிவந்துள்ளது. என்னிடமே இரண்டு சிடிக்கள் உள்ளன, திருட்டு விசிடியை தடுக்கும் பொருட்டு நாளை போலீஸ் உதவியுடன் சென்னையில், நானே நேரடியாக ரெய்டில் இறங்கபோகிறேன் என்று கூறியுள்ளார் பார்த்திபன்.