சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, தனக்கு பிறகு வந்த எந்த இசையமைப்பாளர்களின் திறமையையும் இதுவரை மனம் திறந்து பாராட்டியதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ரகுமானைகூட அவர் இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கி வந்த பிறகுதான் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் தானும் கலந்து கொண்டு பாராட்டி பேசினார்.
அதேசமயம், தனது மூத்த மகனான கார்த்திக் ராஜாவின் திறமையைதான் ஆரம்ப கலத்தில் வெகுவாக பாராட்டியிருக்கிறார். அவரைத்தான் பெரிய அளவில் வருவார் என்றும் எதிர்பார்த்தார். மாறாக, அவர் எதிர்பார்க்காத யுவன் ஷங்கர் ராஜா பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறார். 100 படங்களுக்கு இசையமைத்து விட்ட அவர் மென்மேலும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். தொடர்ந்து ஹிட் பாடல்களையும் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், உங்களது இசையில் உருவான பாடல்களில் இளையராஜாவுக்கு பிடித்தமான பாடல்கள் ஏதாவது உள்ளதா? என்று யுவனிடம் கேட்டால், நான் 100 படங்களுக்கு இசையமைத்து விட்டேன். சமீபகால எனது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட்டாகி வருகிறது. ஆனால், என் தந்தைக்கு எனது இப்போதைய பாடல்கள் எதுவும் பிடித்ததாக அவர் என்னிடம் சொல்லவில்லை.
ஆனால், தனுஷ் நடித்த முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் என் இசையில் உருவான இது காதலா என்ற பாடலை அந்த சமயத்தில் ஒருநாள் என் தந்தை பாராட்டினார். அதன்பிறகு இன்றுவரை என்னை அவர் பாராட்டியதில்லை. ஆனாலும் அந்த முதல் பாராட்டு இன்று வரை என் நெஞ்சில் நிலைத்திருக்கிறது எனகிறார் யுவன்.