அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
நடிகை நமீதா வில்லாயக நடிக்கப்போகிறார். முதல்வர் கருணாநிதி கதை திரைக்கதை வசனத்தில் உருவாகி வரும் புதிய படம் இளைஞன். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். தாய்க்காவியம் என்ற பெயரில் முதல்வர் கருணாநிதி எழுதிய நாவல்தான் இப்போது இளைஞனாக உருவாகிறது. இந்தப் படத்தில் மிகவும் பலமான ஒரு வில்லி கேரக்டர் உள்ளதாம். இந்தப் பாத்திரத்துக்கு நிறைய பேரை யோசித்துப் பார்த்த இயக்குநரும் ஹீரோவும் கடைசியில் நமீதாவை ஓகே செய்துள்ளனர். அவரை அணுகு கதை சொன்னதும், மிகவும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம் நமீதா.
இதுகுறித்து நமீதா கூறுகையில், "இந்தப் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கலைஞர் சார் படத்தில் நடிப்பது இன்னுமொரு பெருமை..." என்றார். அடுத்த வாரம் ஊட்டியில் நடக்கவுள்ள சூட்டிங்கில் நமீதா கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.