வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
ஒரு படம் வெற்றியடைந்து மார்க்கெட் உயரும் வரை ஒரு நடிகரையோ, நடிகையையோ யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஒரு படத்தின் வெற்றி அவர்களை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தி, மக்கள் மத்தியில் புகழ் பெற்று விட்டால் அவர்களை விடாமல் துரத்துவார்கள். அப்படித்தான் பலருக்கு நடந்திருக்கிறது. அதே சமயம், ஒரு சிறிய வீழ்ச்சி அவர்களுக்கு ஏற்பட்டாலும் போதும், அவர்களைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். இது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ சினிமாவிற்கு மிகச் சரியாகப் பொருந்தும்.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வெற்றி மூலம் தமிழ்த் திரையுலக வியாபாரத்தில் உச்சத்தைத் தொட்டவர் சிவகார்த்திகேயன். அந்தப் படத்தின் வெளியீட்டிற்கு முன்பே லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசி அட்வான்ஸும் கொடுத்திருந்தார்களாம். சில மாதங்களுக்கு முன் பொன்ராம் இயக்கத்தில் படத்தை ஆரம்பிக்கலாம் என முடிவான போது, சிவகார்த்திகேயனின் சம்பள விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தயாரிப்பு நிறுவனத்தினர் முன்னர் பேசிய சம்பளத்தை மட்டும்தான் தருவோம் என்றிருக்கிறார்கள். ஆனால், சிவகார்த்திகேயனோ தற்போதையை மார்க்கெட் நிலவரப்படித்தான் சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றிருக்கிறார். பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு சுமார் 6 கோடி ரூபாய் வரை சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் தருவதாக முடிவு செய்திருக்கிறார்கள்.
இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் படம் ஆரம்பிப்பதற்கு முன்பே தொலைக்காட்சி உரிமையையும், சில ஏரியாக்களையும் சில பல கோடிகளுக்கு விற்று கல்லா கட்டி விட்டார்களாம். விஷயம் தெரிந்த சிவகார்த்திகேயன் தரப்பு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறதாம். இந்த ஆண்டில் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் 'கோலி சோடா, மஞ்சப் பை, சதுரங்க வேட்டை' படங்களின் மூலம் வசூல் வேட்டையில் முதலிடத்தில் இருக்கிறது.