வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த விவகாரத்தில் நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கர்நாடக சிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். ரஞ்சிதா தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால் அவரை பிடிக்க நடிகர் சங்கத்தின் உதவியை நாடவும் போலீசார் முடிவு செய்யவிருப்பதாக புதுத் தகவல் வெளியாகியுள்ளது. நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் சிடி வெளியான நாளில் இருந்தே நடிகை ரஞ்சிதா தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால் கலைஞர் டிவியில் ரஞ்சிதா நடித்து வந்த தெக்கத்திப் பொண்ணு சீரியலில் ரஞ்சிதாவின் கேரக்டரே காணாமல் போய் விட்டது. மணிரத்னத்தின் ராவணா படத்திலும் ரஞ்சிதா தொடர்பான காட்சிகளில் வெட்டு விழுந்திருப்பதாக கூறப்படுகிறது.
ரஞ்சிதா எப்போது வெளி உலகுக்கு தலை காட்டுவார்? என பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில், சமீபத்தில் அவரது வக்கீல் வெளியிட்ட அறிவிப்பில், பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருக்க விரும்புவதாக கூறியிருந்தார். அதே நேரம் ரஞ்சிதா கர்நாடக போலீசில் சரணடைந்து நித்தியானந்தா குறித்து வாக்குமூலம் கொடுக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனாலும் ரஞ்சிதா இருக்கும் இடத்தை போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இப்போது ரஞ்சிதாவை பிடிக்க நடிகர் சங்கத்தின் உதவியை நாட கர்நாடக சிஐடி போலீசார் திட்டமிட்டிருப்பதாக புதிய தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
ஏற்கனவே நடிகை ரஞ்சிதா வீடியோ வெளியான நேரத்தில் அதுபற்றி கருத்து தெரிவி்தத நடிகர் சங்க நிர்வாகிகள், ரஞ்சிதா நடிகர் சங்க உறுப்பினரே இல்லை, என்று முதலில் மழுப்பினார்கள். பின்னர் பத்திரிகையாளர்கள் துருவி துருவி கேள்வி கேட்டதால், நடிகர் சங்க தலைவர் சரத்குமார் ஒரு பேட்டியில், நித்தியானந்தா - ரஞ்சிதா விவகாரத்தில் நடிகர் சங்கம் தலையிட முடியாது. ஏனென்றால் அது அவரது சொந்த விவகாரம். இரவில் நடக்கும் விவகாரங்களுக்கெல்லாம் நடிகர் சங்கம் பொறுப்பேற்காது, என்று கூறியிருந்தார். இந்நிலையில் சிஐடி போலீசார் ரஞ்சிதாவை பிடிக்க நடிகர் சங்கத்தை நாடவிருப்பதாக வெளியாகியிருக்கிறது. போலீசாருக்கு நடிகர் சங்கம் ஒத்துழைப்பு கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.