சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தற்போது படங்களில் ஆபாச வசனமோ, அல்லது பிரச்னைக்குரிய காட்சியோ இருந்தால், அந்த வசனத்தை மவுனித்து விடுவார்கள். வாய் மட்டும் அசையும் சத்தம் வராது. அதேபால தொப்புள், மார்பு பகுதி தெரிந்தால் அதனை மங்கலாக்கி மறைப்பார்கள். இனி இந்த வேலை கிடையாது. அதனை முற்றிலுமாக நீக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இதுபற்றி மத்திய தணிக்கை குழு முதன்மை செயல் அதிகாரி ராகேஷ் குமார் கூறியிருப்பதாவது: திரைப்படங்களில் ஆபாச காட்சிகள், வசனங்களை முற்றிலும் நீக்க முடிவு செய்திருக்கிறோம். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தயவுதாட்சண்யமின்றி நீக்கப்படும். வசனங்களை மவுனித்தாலும், காட்சிகளை மங்கலாக்கினாலும் படம் பார்க்கும் ஆடியன்சுக்கு அது புரிந்து விடுகிறது. அதனால் இனி மவுனித்தல், மறைத்தல் இன்றி நேரடியாக காட்சிகளை நீக்க இருக்கிறோம். அப்படி நீக்கினால் மட்டுமே யு சான்றிதழ் வழங்கப்படும். என்கிறார் ராகேஷ் குமார்.