சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தான் இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வைரமுத்துவின் பாடலை இளையராஜாவைப் பாட வைக்க இயக்குநர் சீனு ராமசாமி முயற்சி மேற்கொண்டார். அதற்கு இளையராஜா ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும், வைரமுத்துவின் பாடலை இளையராஜா பாடுகிறார் என ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதைப் பார்த்ததும் செம டென்ஷனாகிவிட்டாராம் இளையராஜா. தன் கோபத்தை, இளையராஜா ஃபேன்ஸ் கிளப் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தன்னுடைய ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
இளையராஜாவின் ஒப்புதலுடன் இளையராஜா ஃபேன்ஸ் கிளப் வெளியிட்ட அந்த செய்தியில், வைரமுத்து அதிகபட்சமாக சாடப்பட்டிருக்கிறார். வைரமுத்துவையும் இளையராஜாவையும் கை குலுக்க வைக்கும் இணைப்பு முயற்சியை செய்த சீனு ராமசாமியையும் இளையராஜாவின் கோபம் விட்டு வைக்கவில்லை. அவரும் அநியாயத்துக்கு கண்டனத்துக்குள்ளாக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் சம்மந்தமேபடாத இயக்குநர் பாலாவுக்கும் அந்த அறிக்கையில் அர்ச்சனை நடத்தப்பட்டிருந்தது.
அதாவது, தாரை தப்பட்டை படத்தில் வைரமுத்துவை பாடல் எழுத வைக்க முயற்சி செய்தாராம் பாலா. அதற்கு கடுமையாய் ரியாக்ட் பண்ணி இருக்கிறார் இளையராஜா. இயக்குநர் பாலா தனது தாரை தப்பட்டை படத்தில் எப்படியேனும் இளையராஜா இசையில் வைரமுத்துவை பாடல் எழுத வைத்து விட வேண்டும் என்று முயற்சி எடுத்தார். ஆனால், அப்படியொரு ஆசை இருந்தால் வேறு யாரையாவது வைத்து இசையமைத்துக் கொள் என்று பாலாவிடம் இளையராஜா உறுதியாக சொல்லிவிட்டார். அதன் பிறகே வைரமுத்துவை பாடல் எழுத வைக்கும் முயற்சியை தவிர்த்தார் பாலா. என்று அந்த அறிக்கையில் பாலாவையும் இழுத்துவிட்டிருக்கிறார்கள் இளையராஜா ஃபேன்ஸ் கிளப் அமைப்பினர். இவ்விஷயம் பாலாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. கடுப்பான பாலா இது குறித்து இளையராஜாவிடம் தன் வருத்தத்தை பதிவு செய்தாராம்.