அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
இனம் என்ற படத்தை இயக்கி இலங்கை தமிழர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டவர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன். கேரளாவைச்சேர்ந்தவரான இவர், தமிழர்களின் உணர்வுகளை கிள்ளிப்பார்த்ததால் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் இவருக்கு எதிராக போர்க்கொடி பிடித்தனர். ஆனால், தமிழ் டைரக்டரான லிங்குசாமி, இனம் ஒரு சிறந்த படம் என்று சொல்லிக்கொண்டு தமிழகமெங்கும் வெளியிட்டார். இதற்கு தமிழ் சினிமாவின் படைப்பாளிகள் என்று சொல்லிக்கொள்ளும் பல டைரக்டர்களும் முதலில் ஆதரவுக்குரல் கொடுத்தனர்.
ஆனால் படத்துக்கு எதிர்ப்புகள் கடுமையானபோது, அதற்கு ஆதரவாக யாருமே குரல் கொடுக்கவில்லை. ஆக, படத்தை வெளியிட்ட லிங்குசாமி சிக்கிக்கொண்டார். அதாவது, இனம் படத்தை வெளியிட்டமைக்காக அடுத்தடுத்து லிங்குசாமி வெளியிடும் எந்த படத்தையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று உலகமெங்கும் வாழும் இலங்கை தமிழர்கள் குரல் கொடுத்தனர். அதோடு, தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களும் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், இந்த ஒரு படம் தனது அடுத்தடுத்து படங்களுக்கு வேட்டு வைத்து விடும் போலிருக்கே என்று உஷாரான லிங்குசாமி, உடனடியாக அந்த படத்தை தியேட்டர்களில் இருந்தே வாபஸ் பெற்றார்.
இருப்பினும், அதே சந்தோஷ் சிவனைத்தான் தனது அஞ்சான் படத்திற்கு ஒளிப்பதிவாளராக்கியிருந்தார். இந்த பிரச்னை காரணமாக அவரை படத்திலிருந்து நீக்கவில்லை. மேலும், தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள அஞ்சானின் தமிழ்ப்பதிப்பில் அவரை படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அழைக்காத லிங்குசாமி, தமிழுக்கும் சேர்த்து தெலுங்கு பதிப்பில் அவரை முதன்மைப்படுத்தி விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளாராம். ஆக, எது எப்படியோ சந்தோஷ்சிவனை பெருமைப்படுத்துவதில் இருந்து பின்வாங்கவில்லை லிங்குசாமி.