ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் |
கே.பாலசநதர் இயக்கத்தில் நூற்றுக்கு நூறு, அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை போன்ற படங்களில் கமல் நடித்த பிறகுதான், அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி என்ட்ரி ஆனார். அதன்பிறகு அவர்கள் இருவரும் இணைந்து மூன்று முடிச்சு, தப்புத்தாளங்கள், நினைத்தாலே இனிக்கும் உள்பட சில படங்களில் நடித்தனர்.
பின்னர் ஒருகட்டத்தில் ரஜினி-கமல் இருவரும் தனித்தனி பாதைகளில் பயணிக்கத் தொடங்கியபோதும், கே.பாலசந்தர் இயக்கத்தில் அவ்வப்போது நடித்தவர்கள் எம்.ஜிஆர், சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் இருதுருவங்கள் ஆனார்கள். ஆனபோதும், தங்களது குருவான கே.பாலசந்தரை அவர்கள் எப்போதும் மறந்ததில்லை. அவர் எந்த விழாக்களுக்கு வந்தாலும் அவரை முன்நின்று வரவேற்பார்கள். தாங்கள் ஏதேனும் விருதுகள் பெற்றால் அதை வாங்கிக்கொணடு, முதல்வேளையாக அவரிடம் ஆசீர்வாதம் பெற்று வந்தனர்.. அந்த அளவுக்கு அவர்கள் குருபக்தியுடன் உள்ளனர்.
மேலும், கே.பாலசந்தரை ரஜினி, கமல் இருவருமே அய்யா என்றே அழைக்கிறார்கள். அதேபோல் தங்களின் பிள்ளைகளை அவரை தாத்தா என்று அழைக்கும்படியே வளர்த்துள்ளனர். இதை சில நிகழ்ச்சிகளில் கூறி பெருமை கொள்ளும் பாலசந்தர், எனது மாணவர்களுக்கு ஈடு இணை யாருமே இல்லை என்று சொல்லி புழகாங்கிதம கொள்கிறார்.