Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நமீதா வராததால் விழா மேடையை சூறையாடிய ரசிகர்கள்!

24 ஜூன், 2014 - 12:04 IST
எழுத்தின் அளவு:

சமீபத்தில் நமீதாவை முன் வைத்து காரைக்காலில் ஒரு நடன நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. நடிகை நமீதாவின் நடனத்துடன் கூடிய உங்களில் யார் லாரன்ஸ்? என்ற நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் அந்த போட்டியை கண்குளிர கண்டுகளிக்க அந்த ஏரியாவைச்சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் திரண்டிருந்தனர். இரவு 8 மணிக்கு தொடங்கிய அந்த நடன நிகழ்ச்சிக்கு ரூ 300 வரை டிக்கெட் தொகை கொடுத்து நமீதாவின் நடனத்தை ரசிக்க அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்களாம். ஆனால், நமீதாவை தவிர யார் யாரோ மேடையில் நடனமாடிக்கொண்டிருக்க, ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அதையடுத்து, திடீரென்று நமீதாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை எனறு விழாவை நடத்தியவர்கள் மேடையில் அறிவித்தார்களாம்.

இதனால் அதுவரை நமீதா வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் மனசை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்த ரசிகர்கள் கொதித்தெழுந்து விட்டார்களாம்.அதோடு, நாற்காலி, மேஜை மற்றும் விழா மேடையையும் அடித்து நொறுக்கி பெரும் கலவரத்தில் ஈடுபட்டார்களாம். அதையடுத்து அங்கு விரைந்த போலீசார் கூட்டத்தை கலைத்து நமீதாவினால் ஏற்பட்ட கலவரத்தை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.


இந்த கலவரம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்துகூட 1 மணி நேரம் பாதிக்கப்பட்டதாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)