படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
சமீபத்தில் நமீதாவை முன் வைத்து காரைக்காலில் ஒரு நடன நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. நடிகை நமீதாவின் நடனத்துடன் கூடிய உங்களில் யார் லாரன்ஸ்? என்ற நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் அந்த போட்டியை கண்குளிர கண்டுகளிக்க அந்த ஏரியாவைச்சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் திரண்டிருந்தனர். இரவு 8 மணிக்கு தொடங்கிய அந்த நடன நிகழ்ச்சிக்கு ரூ 300 வரை டிக்கெட் தொகை கொடுத்து நமீதாவின் நடனத்தை ரசிக்க அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்களாம். ஆனால், நமீதாவை தவிர யார் யாரோ மேடையில் நடனமாடிக்கொண்டிருக்க, ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அதையடுத்து, திடீரென்று நமீதாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை எனறு விழாவை நடத்தியவர்கள் மேடையில் அறிவித்தார்களாம்.
இதனால் அதுவரை நமீதா வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் மனசை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்த ரசிகர்கள் கொதித்தெழுந்து விட்டார்களாம்.அதோடு, நாற்காலி, மேஜை மற்றும் விழா மேடையையும் அடித்து நொறுக்கி பெரும் கலவரத்தில் ஈடுபட்டார்களாம். அதையடுத்து அங்கு விரைந்த போலீசார் கூட்டத்தை கலைத்து நமீதாவினால் ஏற்பட்ட கலவரத்தை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
இந்த கலவரம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்துகூட 1 மணி நேரம் பாதிக்கப்பட்டதாம்.