சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி தயாரிப்பில் ஜெய் நடித்த வடகறி என்ற படம் நேற்று திரைக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தில் வசனங்கள் பல இடங்களில் முகம் சுழிக்க வைக்கிறது. குறிப்பாக பெண்களை சகட்டுமேனிக்கு வறுத்தொடுக்கின்றன வசனங்கள். இதை எல்லாம் மிஞ்சுகிற வகையில் ஒரு காட்சியில் ஹிந்தியில் உள்ள ஆபாசமான ஒரு கெட்ட வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
வடகறி படத்தைப் பார்த்து அதிர்ந்துபோன சிலர் இது பற்றி, தணிக்கைக்குழு அதிகாரிக்கே போன் செய்து இது பற்றி புகார் தெரிவித்துள்ளனர். அந்த வார்த்தை கெட்ட வார்த்தை என்று எங்களுக்கு தெரியாது என்று தணிக்கைக்குழு அதிகாரி விளக்கம் அளித்தாராம். அதே சமயம் அந்த கெட்ட வார்த்தையை படத்திலிருந்து நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இது குறித்து காவல்துறையில் புகார் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறது ஒரு பெண்கள் அமைப்பு. கருணாநிதி ஆட்சியில் சிபாரிசு செய்யப்பட்டு தணிக்கைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்கள் தங்களின் விசுவாசத்தைக் காட்ட கெட்ட வார்த்தையை அனுமதித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.