சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சினிமாவுக்கு வந்த புதிதில் நடிகைகளைக்கண்டாலே கூச்சப்பட்டு விலகிக்கொள்வார் ஜெயம் ரவி. ஆனால், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அசினுடன் நடித்தபோது, ரொம்பவே இயல்பாகி விட்டார். அதுவரை நடிகைகள் அமர்ந்திருக்கும் பக்கமே செல்லாதவர், அந்த படத்தில் நடித்தபோது அசினுடன் மணிக்கணக்கில் கடலை போடத் தொடங்கினார். இப்படி ஆரம்பித்தவர், அதையடுத்து தில்லாலங்கடியில் தமன்னாவுடன் நடித்தபோது அவர் தன்னை கலாய்க்குமபோது பதிலுக்கு இவரும் கலாய்த்தார். அப்படி பேசத் தொடங்கிய ஜெயம் ரவி, இப்போதெல்லாம் நன்றாக பேசக்கூடிய நடிகைகள் தன்னுடன் நடித்தால் ஓய்வு நேரங்களில் படப்பிடிப்பு தளத்தை அரட்டை அரங்கமாக்கி விடுகிறார்.
அந்த வகையில் தற்போது, 'தனி ஒருவன்' படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருபவர், அவர் மீது கொண்ட மரியாதையினால் அடக்கி வாசித்து வருகிறார். ஆனால் 'ரோமியோ ஜூலியட்' படத்தில் தன்னுடன் நடித்து வரும் ஹன்சிகாவை தினம் தினம் கலாய்த்து எடுக்கிறாராம் ஜெயம்ரவி. ஏற்கனவே எங்கேயும் காதல் படத்திலேயே இணைந்து நடித்த ஜோடி என்பதால், ஹன்சிகாவும் அவர் என்ன பேசினாலும் அதற்கு அவரும் பதிலடி கொடுக்கிறாராம். இருப்பினும், சமீபகாலமாக அம்மணிகளை கலாய்ப்பதில் ஜெயம்ரவி படு கில்லாடியாகி விட்டதால், அவரது தாக்குதலை ஹன்சிகாவினால் தாக்குப்பிடிக்க முடியாமல், அடிக்கடி கேரவனுக்குள் சென்று தலைமறைவாகிக்கொள்கிறாராம்.