சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஆந்திர பிரதேசத்தை, தெலுங்கானா, சீமாந்திரா என பிரித்து விட்ட சூழ்நிலையில் தெலுங்குத் திரையுலகம் இரண்டாகப் பிரியுமா என ஒரு சந்தேகம் தெலுங்குத் திரையுலகில் லேசாக எட்டிப் பார்த்துள்ளதாம். தெலுங்கானா மக்களும், அரசாங்கமும் சீமாந்திராவைச் சேர்ந்தவர்கள் அவர்களது மாநிலத்தில் கொடிகட்டிப் பறப்பதை விரும்பவில்லையாம். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை ஹைதராபாத்தான் தற்போது முன்னணி திரைப்பட நகரமாக விளங்கி வருகிறது. சென்னையில் பல ஸ்டுடியோக்கள் மூடப்பட்டு விட்ட நிலையில் ஹைதராபாத்தில் பல மொழித் திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் சீமாந்திராவிற்கென தனியாக ஒரு திரைப்பட நகரை அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உருவாக்கினால் தெலுங்கத் திரையுலகம் பிளவுபட வாய்ப்புள்ளதாக கருதுகிறார்கள். தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் ஹைதராபாத் மட்டுமே மிகப் பெரிய மாநகரமாக உள்ளது. ஆனால், சீமாந்திராவில் விஜயவாடா, விசாகப்பட்டிணம், உட்பட சில நகரங்கள் பெரியதாக உள்ளன. அது மட்டுமல்லாமல் தெலுங்கானா பகுதியில் இந்தி மொழி பேசும் மக்களும் அதிகம் வசிக்கிறார்கள். திரைப்படங்களைப் பொறுத்தவரையில் சீமாந்திரா பகுதி மக்கள் மூலமே வருமானம் அதிகம் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
ஒருவேளை சீமாந்திராவின் புதிய திரைப்பட நகராக விஜயவாடா உருவாகினால் தெலுங்குத் திரையுலகமும் பிரிய நேரிடும். அதனால் கிடைக்கும் வருமானம் சீமாந்திராவிற்கே அதிகம் சேரும் என்கிறார்கள். மேலும், தெலுங்குத் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கமே அதிகம். எனவே, அவர்களை தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் மேலும் வளர்த்து விடுவது சந்தேகம்தான் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால், மாநிலப் பிரிவினைக்கு முன்னதாக வந்த சில தெலுங்குப் படங்கள் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளிக் குவித்திருக்கின்றன. மக்களிடம் அந்த பிரிவினை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் சொல்கிறார்கள். இருந்தாலும் போகப் போக, பிரிவினையில் பாதிப்பு தெலுங்கத் திரையுலகிலும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவே மூத்த திரையுலகப் பிரமுகர்கள் கருதுகிறார்களாம். அதனால், இப்போதே அவர்கள் மாற்றத்துக்கும் தயாராகி வருகிறார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.