சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் நடித்து வரும் சூர்யா தற்போது கோவாவில் சமந்தா உடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் பூச்சாண்டி படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான போட்டோஷூட் கடந்த வாரம் நடைபெற்றது. விரைவில் பூச்சாண்டி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் பூச்சாண்டி படத்தை அடுத்து எந்தப் படத்தில் நடிப்பது என்பதையும் சூர்யா முடிவு செய்துவிட்டார்.
பூச்சாண்டி படத்தைத் தொடர்ந்து சீமான் இயக்கும் படத்தில்தான் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்ருக்கிறார். கலைப்புலி தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். கோபம் என பெயர் சூட்டி உள்ளார் சீமான். இந்தப் படத்தில் சூர்யா உடன் இணைந்து நடிக்கிறார் ஜெயம் ரவி. கோபம் படத்தில் சூர்யா, ஜெயம்ரவி இருவருக்கும் சமமான கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறாராம் சீமான்.