சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விருமாண்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் பசுபதி. அதன் பிறகு பல படங்களில் குணசித்திர நடிகராகவும், வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்துள்ளார். அடிப்படையில் நாடக நடிகரான பசுபதி மீண்டும் நாடகத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
மேஜிக் லேண்ட் நிறுவனம், மற்றும் எஸ்.எஸ்.இண்டர்நேஷன் அமைப்பும் இணைந்து பொன்னியின் செல்வன் நாடகத்தை கடந்த 7ந் தேதி சென்னை மியூசிக் அகடாமியில் அரங்கேற்றியது. கல்கியின் வரலாற்று நாவலை நடிகர் குமரவேல் நாடக வடிவமைக்கியிருக்கிறார். இந்த நாடகம் நிஜமான வாள் சண்டைகள், தோட்டா தரணியின் பிரமாண்ட அரண்மணை செட்டுகளில் நடக்கிறது. வருகிற 14ம் தேதி வரை நடக்கும் இந்த நாடகத்துக்கு அனைத்து நாட்களும் ஹவுஸ்புல்லாகிவிட்டது.
இந்த நாடகத்தில் திரைப்பட நடிகர் பசுபதி, பொன்னியின் செல்வனின் முக்கிய கதாபாத்திரமான ஆதித்ய கரிகாலனாக நடிக்கிறார். போ.மு.ராமசாமி பெரிய பழுவேட்டையராக நடிக்கிறார். ஸ்ரீதரன் பொன்னியின் செல்வனாக நடிக்கிறார். பிரவீன் என்பவர் இயக்குகிறார்.
இந்த நாடகத்தின் ஒத்திகை, மற்றும் நாடகத்திற்காக தனது சினிமா படப்பிடிப்புகளை மூன்று மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார் பசுபதி.