அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
பிரபல மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஜீவா. ரஜினி மாதிரி மிமிக்ரி செய்தே முன்னுக்கு வந்தவர். சந்தானம் லொள்ளு சபா நிகழ்ச்சியிருந்து விலகி நடிகர் ஆனதும். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தியவர். இப்போது ஜீவாவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சில படங்களில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்திருக்கும் ஜீவா. மாப்பிள்ளை விநாயகர் படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார். நான் காமெடியன் இல்லை. ஹீரோதான் என்கிறார் ஜீவா.
அவர் மேலும் கூறியதாவது: சந்தானம் ஓட்டிக்கொண்டிருந்த லொள்ளு சபா குதிரையை என்கிட்ட கொடுத்தாங்க. நானும் நல்லா ஓட்டினேன். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த குதிரை ஓடிக்கிட்டேதான் இருக்கும். நான் சினிமாவில் நடிக்க வந்த பிறகு நானும் சந்தானம் மாதிரி காமெடியனாகத்தான் நடிப்பேன்னு நிறைய பேர் நினைச்சிக்கிட்டிருக்காங்க. ஆனால் நான் ஹீரோவா நடிக்கிறதுக்குதான் சினிமாவுக்கு வந்திருக்கேன். இதுவரைக்கும் நடிச்ச கேரக்டர்கள்லகூட பெருசா காமெடி இருக்காது. கேரக்டராத்தான் இருக்கும். இடையில் கோச்சடையான் படத்துக்காக ரஜினி சாருக்கு டூப்பா நடிச்சது என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பாக்கியம்" என்கிறார் ஜீவா.