பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு | ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு | ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில் | படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… | சென்னையும்... ‛கப்புள் பிரண்ட்லி' படமும் : இயக்குனர் அஷ்வின் பேட்டி | 'கங்குவா' சாதனையை முறியடிக்குமா 'கமல் ரஜினி ரீ யூனியன்' வீடியோ | தடை போடாதீங்க, என்னை விட்டுவிடுங்க : ‛தாய் கிழவி' விழாவில் சிவகார்த்திகேயன் உருக்கம் | தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா |
சூப்பர் ஸ்டார் ரஜினி பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது அவரைப்போலவே சாயல்கொண்ட நடிகராக வலம் வந்தவர் நளினிகாந்த். தெலுங்கில் தாசரி நாராயணராவ் இயக்கிய ரங்கோன் ரவுடி படத்தின் மூலம் அறிமுகமானார். அவர்தான் நளினிகாந்த் என்று பெயரும் வைத்தார். கே.பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு, ராசுக்குட்டி படங்களில் வில்லனாக நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 90 படங்களுக்கு மேல் நடித்த நளினிகாந்த் அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து இயக்கினார்.
தற்போது யாமிருக்க பயமே படத்தின் மூலம் சினிமாவில் ரீ- என்ட்ரி ஆகியிருக்கிறார். அந்த படத்தில் பேய்மாளிகையில் வசிக்கும் முதியவராக நடித்துள்ளார். அடுத்து ஏ.ஆர்.முருகாசின் கத்தி படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
"சினிமாவை விட்டு விலகி 20 வருடங்கள் ஆகிவிட்டது. சின்னத்திரையில் இருந்தேன். திடீரென்று ஒரு நாள் என்னை அழைத்து யாமிருக்க பயமேவில் நடிக்க வைத்தார்கள். படத்தின் என் கேரக்டர் பேசப்படுவதால் நிறைய வாய்ப்புகள் வருகிறது. தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளேன்" என்கிறார் நளினிகாந்த்.