நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
சூப்பர் ஸ்டார் ரஜினி பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது அவரைப்போலவே சாயல்கொண்ட நடிகராக வலம் வந்தவர் நளினிகாந்த். தெலுங்கில் தாசரி நாராயணராவ் இயக்கிய ரங்கோன் ரவுடி படத்தின் மூலம் அறிமுகமானார். அவர்தான் நளினிகாந்த் என்று பெயரும் வைத்தார். கே.பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு, ராசுக்குட்டி படங்களில் வில்லனாக நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 90 படங்களுக்கு மேல் நடித்த நளினிகாந்த் அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து இயக்கினார்.
தற்போது யாமிருக்க பயமே படத்தின் மூலம் சினிமாவில் ரீ- என்ட்ரி ஆகியிருக்கிறார். அந்த படத்தில் பேய்மாளிகையில் வசிக்கும் முதியவராக நடித்துள்ளார். அடுத்து ஏ.ஆர்.முருகாசின் கத்தி படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
"சினிமாவை விட்டு விலகி 20 வருடங்கள் ஆகிவிட்டது. சின்னத்திரையில் இருந்தேன். திடீரென்று ஒரு நாள் என்னை அழைத்து யாமிருக்க பயமேவில் நடிக்க வைத்தார்கள். படத்தின் என் கேரக்டர் பேசப்படுவதால் நிறைய வாய்ப்புகள் வருகிறது. தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளேன்" என்கிறார் நளினிகாந்த்.