சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விஜய் குடும்பத்தார் திருமணத்துக்கு வற்புறுத்தியதால்தான் உடனே திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன் என்று அமலாபால் கூறினார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: 'தெய்வ திருமகள்' படத்தில் நடித்தபோதே இருவரும் காதலிக்க ஆரம்பித்து விட்டோம். எங்கள் காதலை, விக்ரம்தான் முதன் முறையாக கண்டுபிடித்தார். நீங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கூறினார். தலைவா படத்தின் போது தினமும் சிட்னி நகரில் தனியாக வாக்கிங் போவோம். அப்போது நிறைய மனம் விட்டு பேசியிருக்கிறோம். இதை பார்த்த கலா மாஸ்டருக்கும் எங்கள் காதல் தெரிந்தது. தலைவாவில் கயிறில் தொங்கியபடி நடனம் ஆடியபோது கீழே விழுந்து காயம் பட்டது. உடனே விஜய் அழுதுவிட்டார். இதை பார்த்து யூனிட்டில் உள்ள அனைவருக்கும் எங்கள் காதல் தெரிந்தது. அங்கிருந்து கசிய ஆரம்பித்து விட்டது.
எங்கள் காதல் திருமணத்தில்தான் முடியும் என்று எனக்கு முன்பே தெரியும். ஆனால் நான் இன்னும் மூன்று வருடங்கள் நடிக்க விரும்பினேன். விஜய்யும் நீ நல்ல நடிகை இன்னும் மூன்று வருடங்கள் நடித்தால் நல்ல நிலையை அடைந்து விடுவாய் என்றுதான் கூறினார். ஆனால் அவரது வீட்டில் திருமணத்துக்கு வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அவர் இனிமேலும் எனக்காக காத்திருக்க முடியாத என்ற சூழ்நிலையில்தான் திருமணம் செய்ய முடிவு செய்தோம். எப்போதுமே எனக்கு சினிமாவை விட வாழ்க்கைதான் முக்கியம்.
இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.