வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
1963ம் ஆண்டு சத்யஜித்ரே இயக்கிய பெங்காலி திரைப்படம் மகாநகர். அந்த காலத்தில் மாபெரும் வெற்றி பெற்றதோடு இன்று வரைக்கும் விருதுகளை குவித்துக் கொண்டிருக்கும் படம். சினிமா கற்பவர்களுக்கு பாடமாக இருக்கிற படம். இந்தப் படத்தின் பிரதிகள் சிதிலமடைந்து விட்டன. பல பிரிண்டுகளை சேகரித்து அதில் சிதிலமடையாமல் இருக்கும் காட்சிகளை எடுத்து மறுசீரமைப்பு செய்து வருகிறார்கள். கடந்த 2012ம் ஆண்டிலிருந்து 300 கம்ப்பயூட்டர் நிபுணர்கள் பிரேம் பை பிரேமாக மகாநகருக்கு மீண்டும் உயிர் கொடுத்து வருகிறார்கள்.
பெண்கள் வேலைக்கு செல்வதை சமூக குற்றமாக கருதிய காலத்தில் துணிச்சலாக ஒரு பெண் வேலைக்கு செல்வதும், அவள் சந்திக்கும் பிரச்னைகளும்தான் படத்தின் கதை. இந்த கதையை இன்ஸ்பிரேசனாக கொண்டுதான் கே.பாலச்சந்தர். அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, மனதில் உறுதி வேண்டும் படங்களை இயக்கினார். முதல் கட்டமாக சென்னை உள்ளிட்ட 9 நகரங்களில் வெளியிட இருக்கிறார்கள்.