வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
நான் சிகப்பு மனிதன் படத்தில்தான் அதுவரை கிளாமர் பக்கமே தலைவைத்து படுக்காமல் இருந்த லட்சுமிமேனனை சற்று கிளாமராக நடிக்க வைத்ததோடு, உதட்டு முத்தக்காட்சியிலும் நடிக்க வைத்து பரபரப்பு கூட்டினார் விஷால்.
ஆனால், யாராவது லட்சுமிமேனன் அந்த படத்தில் கிளாமராக நடித்திருக்கிறார் என்று சொன்னால், டென்சனாகி விடுகிறார்கள். அந்த படத்தில்தான் அவர் சிட்டி பெண்ணாக நடித்தார். அதனால் அதை கிளாமர் என்று சொல்ல முடியாது, சாதாரண பெண்களைப் போல்தான் இருந்தார் என்று சொல்லும் விஷால், என்னைப்பொறுத்தவரை லட்சுமிமேனன் சாதாரண நடிகையல்ல. ரொம்ப வித்தியாசமான நடிகை என்கிறார்.
அதாவது, இந்த படத்துக்காக தண்ணீருக்கு அடியில் நாங்கள் நடிக்க வேண்டிய காட்சியை 8 மணி நேரம் தண்ணீருக்குள் மூழ்கியபடி நடிக்க வேண்டும். நாங்கள் உள்பட கேமராமேன், டைரக்டர் என அனைவருமே உள்ளே இருந்தோம. அப்போது குளிரில் நடுங்கி விட்டார் லட்சுமிமேனன். அதுவும் முத்தக்காட்சியில் முதன்முதலாக நடிக்கிறார். இருப்பினும் அவரிடம் எந்த சலனமும் இல்லை. அந்த கேரக்டராகவே மாறி நடித்தார். அவரை தவிர வேறு எந்த நடிகைகளாக இருந்தாலும் இந்த மாதிரி தண்ணீருக்கு அடியில் முத்தக்காட்சி என்றால் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்.
அதோடு, இன்னொரு காட்சியிலும் அப்படித்தான். நான்கு நாட்களாக கொட்டும் மழையில் நனைந்து கொண்டே நடித்தார். சில சமயங்களில் அவரை அறியாமல் அவரது உடம்பு குளிரினால் நடுங்கும். அப்போது அவரிடம் ரொம்ப கஷ்டமா இருக்கா என்று கேட்டால், அது ஒன்னுமில்லை சார். பரவாயில்ல டேக் போகலாம் என்று சொல்வார். அந்த வகையில் எனது கேரியரில் இந்த அளவுக்கு நடிப்புக்காக எந்த கஷ்டங்களையும் தாங்கிக்கொள்ளக்கூடிய நடிகையை நான் பார்த்ததில்லை என்கிறார் விஷால்.