சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சமீபத்தில் நடைபெற்ற உன் சமையலறையில் படத்தின் ஆடியோ விழாவின்போது, இளையராஜாவை இசைக்கடவுள் என்று அவர் முன்னிலையில் குறிப்பிட்டார் பிரகாஷ்ராஜ். இந்த படத்துக்காக ஒரு கவிதையை அவரிடம் படித்துக்காண்பித்தபோது உடனே அதற்கு டியூன் போட்டு விட்டார். அதோடு சிறிது நேரத்தில் அதை அவரே பின்னணியும் பாடி விட்டார். ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த பிறகும் இளையராஜாவிடம் இருக்கும் இந்த சுறுசுறுப்பு ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. மேலும், எனது தோனி படத்திற்கு இசையமைத்தபோது நான் இளையராஜாவைப்பற்றி உணரவில்லை. ஆனால் இந்த, உன் சமையலறையில் படத்திற்கு இசையமைக்க சென்றபோதுதான் அவரிடம் நெருக்கமாக பழகினேன். அப்போதுதான் அவரை உணரத் தொடங்கினேன்.
சாதாரணமான மனிதர்களால் இந்த மாதிரியெல்லாம் செயல்படமுடியாது. அதனால் என்னைப்பொறுத்தவரை இளையராஜா ஒரு இசைக்கடவுளாகவே தெரிகிறார். மேலும், என் படத்துக்கு இசையமைப்பதோடு, எனக்கு எப்படி வாழ வேண்டும் என்றும் கற்றுக்கொடுத்தார் அவர். அதன்பிறகே நான் நிதானமாக செயல்படத் தொடங்கியிருக்கிறேன். எந்தவொரு விசயத்தையும் எடுத்தோம் கவுத்தோம் என்று செய்வதில்லை. ஒருமுறைக்கு பலமுறை யோசித்து அதன்பிறகே திறம்பட செய்கிறேன் என்று சொல்லும் பிரகாஷ்ராஜ, என்னை வாழ்க்கையில் நெறிபடுத்தியவர் யார் என்றால் அது இளையராஜா மட்டுமே என்கிறார்.