ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? |
சமீபகால தமிழ் சினிமா டாஸ்மாக்கை சுற்றிய கதைகளை வைத்துதான் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் சரக்கடிப்பது போன்ற காட்சிகள் இல்லாத படங்களை இல்லை என்றாகி விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சினிமா விஐபிக்கள், அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் செய்வதை அப்படியே ரசிகர்கள் பிரதிபலிக்கிறார்கள். அதனால் அவர்கள் படங்களில் சரக்கடிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டு வருவதும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தான் நாயகனாக நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஒரு காட்சியில் சந்தானத்துடன் இணைந்து சரக்கடிப்பார் உதயநிதி. ஆனால், இரண்டாவதாக நடித்த இது கதிர்வேலன் காதலி படத்தில் இவர் சரக்கடிக்கமாட்டார். மாறாக சந்தானத்துக்கு ஊத்திக்கொடுப்பது போல் அருகில் அமர்ந்திருப்பார்.
ஆனால், இனிமேல் தான் நடிக்கிற எந்தவொரு படத்திலும் சரக்கு சம்பந்தப்பட்ட அயிட்டங்களை கண்ணிலேயே காட்டப்போவதில்லை என்று இப்போது முடிவு செய்திருக்கிறார் உதயநிதி. நடிகர்கள் செய்வதை ரசிகர்கள் அப்படியே பின்பற்றுகிறார்கள். மேலும், நான் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவன், அதனால் சமூகத்துக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கக்கூடாது என்று கருதுகிறேன் என்று கூறியுள்ள உதயநிதி, தன்னை வைத்து படம் இயக்க அடுத்தடுத்து கதை பண்ணியுள்ள டைரக்டர்களிடம் இனிமேல் சத்யமாக சரக்கடிப்பது போல் நடிக்க மாட்டேன். அதனால் என் படங்களில் அந்த மாதிரி காட்சிகளை பண்ணாதீர்கள் என்று கேட்டுக்கொண்டு வருகிறார்.