சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சர்ச்சை நாயகியான ஆண்ட்ரியாவுக்கு சினிமாவில் இது பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் அவர் என்ன பாடினாலும் அதை காதில் தேன் வந்து பாய்வது போன்று ரசிக்கிறார்கள். அவரது இனிமையான குரல், தான் இசையமைக்கும் படங்களுக்கு வேண்டும் என்பதினால்தான் உதட்டு முத்த பிரச்சனைக்குப்பிறகு ஆண்ட்ரியாவுடன் கா விட்டிருந்த இசையமைப்பாளர் அனிருத் இப்போது பழம் விட்டு விட்டார். அந்த அளவுக்கு ஆண்ட்ரியா மோகம் கோடம்பாக்கத்தில் தலைவிரித்தாடுகிறது.
இந்த நிலையில்தான், தற்போது தரமணி படத்தில் ஒரு ஆங்கில பாடலுக்கு தானே இசையமைத்து எழுதி, பாடியிருக்கிறார் ஆண்ட்ரியா. இந்த பாடலை கமல்தான் வெளியிட வேண்டும் என்று ஆசைப்பட்ட ஆண்ட்ரியா, கமலுக்கு ஒரு போன்கூட செய்யவில்லையாம். ஒரு மெசேஜ்தான் அனுப்பினாராம் (மேடையில் ஆண்ட்ரியாவேதான் இதை சொன்னார்), அதைப்பார்த்து விட்டு அவரும் வந்து அந்த பாடலை வெளியிட்டார்.
அதையடுத்து கமல் பேசுகையில், இங்கு எல்லோரும் ஆண்ட்ரியா நன்றாக தமிழ் பேசுவதை ஆச்சர்யமாக சொன்னார்கள். ஆனால், விஸ்வரூபம் படத்தில் நடித்தபோதே ஓரளவு பேசுவார்,.அதற்காக நான்தான் அவருக்கு தமிழ் கற்றுக்கொடுத்தேன் என்று சொல்ல மாட்டேன். அவரது முயற்சிதான் அவருக்கு வெற்றியை கொடுக்கிறது.
மேலும், ஆண்ட்ரியா பாடல் கம்போஸ் செய்வது இப்போதுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால் எனக்கு விஸ்வரூபம் படத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்தபோதே தெரியும். தான் கம்போஸ் செய்ததை செல்போனில் கேட்டுக்கொண்டிருப்பார்.அதை நானும் பலமுறை கேட்டு இசை மழையில் நனைந்திருக்கிறேன். அப்படி நான் கேட்ட பாடல்களில் ஒன்றுதான் இன்று ஆண்ட்ரியாவின் இசையில் வெளியாகியிருக்கும் இந்த பாடல். அவரிடம் இதுபோன்ற இன்னும் ஏராளமான திறமை உள்ளது என்று ஆணட்ரியா பற்றி பேசினார் கமல்.