சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரபல பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தர். இவர் பாடியதை விட மைக் மோகனுக்கு பின்னணி குரல் கொடுத்து அவரை வாழ வைத்தவர். சுரேந்தர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இப்போது அவர் மகன் விராஜ், மொழிவது யாதெனில் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார். படத்தில் ஹீரோயின் இல்லை. ராஜன், ரியாஸ், தேஜ் என பல புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். எஸ்.கோபாலகிருஷ்ணன் என்பவர் டைரக்ட் செய்கிறார்.
"ஒரு நண்பன் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறான். அவனது நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து நண்பன் பட்ட கடனை அடைத்து அவன் குடும்பத்தை எப்படி கரை சேர்க்கிறார்கள் என்கிற கதை. நட்பை புதிய கோணத்தில் சொல்கிறோம்" என்கிறார் டைரக்டர் கோபாலகிருஷ்ணன்.
நடிக்க வந்தது பற்றி விராஜ் கூறியதாவது: அப்பாவுக்கு நான் அவரைப்போலவே பெரிய பாடகன் ஆகணும்னு ஆசை. ஆனால் என்னோட ஆசை நடிக்கிறதுல இருந்திச்சு. இதனால நடிப்பு, டான்ஸ், பைட் எல்லாத்தையும் முறைப்படி கத்துகிகிட்டு வந்திருக்கேன். நிச்சயம் நடிப்புல சாதிப்பேன்" என்கிறார்.
நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினர் விராஜ் அதுபற்றி கேட்டால்... "அவுங்க குடும்பத்தோட தொடர்பு விட்டுப்போய் ரொம்ப வருஷமாச்சு. இப்ப போய் அத எதுக்கு பேசணும்" என்று அடக்கமாக சொல்கிறார் விராஜ்.