சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை வறட்சி ஏற்பட்டிருப்பதாக சினிமா மேடைகளில் பேசி வருகிறார்கள். ஆனால், கதை வறட்சியை விட டைட்டில் வறட்சி அதைவிட கடுமையாக உள்ளதாகவே தெரிகிறது. அதனால்தான் பாண்டிராஜ் இயக்கத்திலும், கெளதம் மேனன் இயக்கத்திலும் சிம்பு நடிக்கும் படங்கள், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் என பல படங்கள் இன்னமும் டைட்டில் வைக்கப்படாமலேயே வளர்ந்து கொண்டிருக்கின்றன.
மேலும், பில்லா-2, சிங்கம்-2வை தொடர்ந்து சில படங்கள் விஸ்வரூபம்-2, ஜெய்ஹிந்த்-2 என ஏற்கனவே வெளியான டைட்டீல்களின் இரண்டாம் பாகங்களாக அதே டைட்டிலில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் இன்னும் சில படங்களின் இரண்டாம் பாகங்களும் வளரும் நிலையில் உள்ளன.
இந்நிலையில், மங்காத்தா, பிரியாணி படங்களை இயக்கிய வெங்கட்பிரபு அடுத்து சூர்யாவைக்கொண்டு தான் இயக்கவிருக்கும் படத்துக்கு கமல் நடித்த கல்யாணராமன் என்ற டைட்டில் வைக்கும் முடிவில் இருக்கிறார். கல்யாணராமன் படத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்ததுபோல் இப்படத்தில் சூர்யாவும் இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். அதோடு கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் இதே தலைப்பை வைக்கலாம் என்று சூர்யாவும் சொல்லியிருக்கிறாராம்.
அதனால், கமல் நடித்த கல்யாணராமன் படத்தை தயாரித்த பஞ்சு அருணாசலத்திடம் டைட்டிலை மீண்டும் பயன்படுத்திக்கொள்வதற்கான அனுமதி கோரியுள்ளாராம் வெங்கட்பிரபு.