சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பருத்தி வீரன் படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி. ஆனால், அதன்பிறகு கோடம்பாக்கத்தில் அவருக்கேற்ற சொல்லிக்கிற அளவுக்கு படங்கள் இல்லை. அதனால், தெலுங்கு, கன்னட படங்களில் சில ஆண்டுகளாக நடித்து வரும் ப்ரியாமணி, சாருலதா என்ற படத்தில் ஒட்டிப்பிறந்த சகோதரியாக நடித்திருந்தார். ஆனால், அப்படம் பேசப்பட்ட அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
அதையடுத்து ஆக்சன் கதைகள் பக்கம் கவனத்தை திருப்பிய ப்ரியாமணி, தற்போது சாண்டி என்றொரு படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்துக்காக கத்தி சண்டை பயிற்சிகளை எடுத்து சண்டை காட்சிகளிலும் கலக்கியிருக்கிறாராம். அதைப்பார்த்து, தெலுங்கு சினிமாவில் அனுஷ்காவுக்கு வேண்டாதவர்கள் சிலர் ஒன்றுகூடி அவரை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே, ப்ரியாமணியின் நடிப்பை பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளி வருகிறார்களாம்.
தன்னையும் ஆக்சன் ஹீரோயினியாக சினிமா உலகம் அங்கீகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ப்ரியாமணி, அடுத்து அனுஷ்காவுக்கு போட்டியாக களத்தில் குதித்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். அதனால் இதுவரை கிளாமர் கதாநாயகியாக ஆந்திராவை கலக்கி வந்த ப்ரியாமணி, இனி ஆக்சனில் கலக்கப்போவது உறுதியாகியிருக்கிறது.