பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் |
சூர்யா அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கப்போவது உறுதியாகிவிட்டது. லிங்குசாமிதான் தயாரிக்கவும் செய்கிறார். சமந்தா ஹீரோயின், யுவன் இசை. வழக்கு எண் 18|9 படத்தை ஸ்டில் கேமராவில் எடுத்து சாதனை படைத்த லிங்குசாமி சூர்யாவின் படத்தை தற்போது வந்துள்ள அதிநவீன டிஜிட்டல் கேமராவான ரெட் டிராகனில் படமாக்க உள்ளார்.
கடந்த ஆண்டு வெளிவந்த ஆரி அலெக்ஷா என்ற அதி நவீன கேமராவை வைத்து துப்பாக்கியை ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் சிவன் இப்போது ரெட் டிராகனை வைத்து சூர்யாவை படம் பிடிக்க இருக்கிறார். இந்த கேமரா தற்போது சென்னை வரவழைக்கப்பட்டுள்ளது. பிரசாத் ஸ்டூடியோவில் இந்த கேமரா மூலம் டெஸ்ட் ஷுட் நடத்தப்பட்டது. அதன் முடிவு இயக்குனர் லிங்குசாமி, ஹீரோ சூர்யா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகியோருக்கு திருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதாம். அதனால் நம்பிக்கையோடு அடுத்த மாதம் 15ந் தேதி முதல் ஷுட்டிங் கிளம்புகிறார்கள். முதல்கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடக்கிறது.