பெங்களூருவில் ‛எம்புரான்' படத்திற்காக விடுமுறை அளித்து சிறப்பு காட்சிக்கும் ஏற்பாடு செய்த கல்லூரி | சபாபதி, சந்திரமுகி, கல்கி 2898 ஏடி- ஞாயிறு திரைப்படங்கள் | டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? |
விஜய் நடித்துள்ள தலைவா படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு தர முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள படம் தலைவா. இப்படம் நேற்று வெளியாக வேண்டியது. ஆனால் சில பல பிரச்னைகளால் தமிழகம் தவிர்த்து இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே தலைவா படத்திற்கு யு சான்று அளிக்கப்பட்டதை தொடர்ந்து கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தமிழக அரசிடம் படக்குழுவினர் கேட்டிருந்தனர்.
அதன்படி படத்தை பார்த்த 7பேர் கொண்ட தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு குழுவினர், படத்திற்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று கூறிவிட்டனர். படத்தில் சில காட்சிகளுக்கும், விஜய் பேசும் சில வசனங்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்தனர். படத்தின் தலைப்பு தமிழில் இருந்தாலும், யு சான்று பெற்றாலும், ஆங்கில கலப்பு வசனங்கள் நிறைய இருக்கிறது என்றும், பெண்கள், குழந்தைகள் மனதைப் பாதிக்கும் வண்ணம் படத்தில் வன்முறை அதிகம் உள்ளதாலும், சமுதாயத்தை திசை திருப்பும் வண்ணத்தில் விஜய்யின் வசனங்கள் இருப்பதாலும் தலைவா படம் வரிவிலக்கு பெறுவதற்கு தகுதியற்றது என்றும் தேவேந்திர பூபதி, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை ராஜஸ்ரீ உள்ளிட்ட 7பேர் கொண்ட உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதனையடுத்து படத்திற்கு வரிவிலக்கு அளிக்க முடியாது என்று தமிழக அரசு கூறி அதற்கான ஆணையையும் பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே படம் ரிலீஸாவதில் சிக்கல் உள்ள நிலையில், படத்திற்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று தமிழக அரசு கூறியிருப்பது ‘தலைவா’வுக்கு மேலும் ஒரு ‘தலைவலி’யை ஏற்படுத்தியுள்ளது.