சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் தனது குடும்பத்தாரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்த நடன பெண் துணை இயக்குனர், திடீரென மனுவை வாபஸ் பெற்றார்.
சென்னை அசோக் நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்த பார்த்திபன் மகள் செல்வராணி (31), விழுப்புரம் எஸ்.பி., மனோகரனிடம் நேற்று அளித்த மனு : சினிமா நடன துணை இயக்குனராக பணியாற்றி வருகிறேன். சினிமா நடிகர் ராகவா லாரன்ஸ்க்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. என்னை திருமணம் செய்வதாகக் கூறி, 12 ஆண்டுகளாக என்னுடன் குடும்பம் நடத்தினார். நானும், அவரது முதல் மனைவி லதாவும் ஒரே வீட்டில் வசித்தோம். பின், என்னை திருமணம் செய்ய மறுத்ததோடு, குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் மறுத்தார். இதனால், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. எனது குடும்பத்தினர் வற்புறுத்தியும் என்னை திருமணம் செய்ய மறுத்தார். அதனால், விழுப்புரம் வந்து விட்டேன். எனது குடும்பத்தார் மூலமும், ராகவா லாரன்ஸ் மூலமும் எனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் செல்வராணி கூறியிருந்தார்.
திடீர் வாபஸ் : விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் பகல் 12: 00 மணிக்கு புகார் அளித்த செல்வராணி, மாலை 5:00 மணிக்கு மனுவை திடீரென வாபஸ் பெற்றார். அடுத்த அரை மணி நேரத்தில், செல்வராணியை தேடி, அவரது அக்கா விஜயராணி அங்கு வந்தார். இவர், செல்வராணியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு எஸ்.பி., யிடம் மனு கொடுத்தார். இது குறித்து டவுன் டி.எஸ்.பி., சங்கர், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். மாலை 5:00 மணிக்கு தனது குடும்பத்தினருடன் செல்வதாக செல்வராணி கூறியதன் பேரில், அனுப்பி வைக்கப்பட்டார். பாதுகாப்பு கேட்டு கொடுத்த புகார் மனுவை செல்வராணி வாபஸ் பெற்றார். இச்சம்பவத்தின்போது, செல்வராணியுடன் வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த பாலமுருகன், விசாரணைக்குப் பின், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.