'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

'ஏஐ'யின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக பிரபலங்களின் தனிப்பட்ட உரிமைகள் மீறப்பட்டு வருகிறது. அதன் மூலம் அவர்களது புகைப்படங்கள், வீடியோக்கள் என எதையெதையோ சிலர் தவறாகப் பரப்பி வருகிறார்கள். இதனால், பல சினிமா பிரபலங்கள் அவர்களது தனிப்பட்ட ஆளுமை உரிமையைப் பாதுகாக்கும் வகையில் நீதிமன்றத்தில் அதற்கான தடையைப் பெற்று வருகிறார்கள்.
ஐஸ்வர்யா ராய், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, இளையராஜா ஆகியோரது வரிசையில் தெலுங்கு நடிகரும் ஆந்திர மாநில முதல்வருமான பவன் கல்யாண் கடந்த மாதம் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆளுமை உரிமை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது அனுமதி இல்லாமல் வணிக ரீதியில் அவரது பெயர், இனிஷியல், புகைப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நாளை ஜனவரி 12ம் தேதி விசாரணைக்கு வருகிறது.